Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன் விண்ணப்ப படிவம் அனைத்து பகுதிகளிலும் நகராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும், மற்றும் வீடு தேடி அதிகாரிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் வழங்கி வருகின்றனர் .
அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர பகுதியில் மகளிருக்கு கலைஞரின் உரிமை தொகைக்கான டோக்கன் விண்ணப்ப படிவத்தை ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர் நேரில் சென்று வழங்கினார்.
இந்நிகழ்வில் 15 வது வார்டு திமுக செயலாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் ராஜா (எ) யோகராஜன், கோபி, தொண்டர்கள் உடன் இருந்தனர்.